தோடா: ஜம்முவின் தோடாவில் நேற்று முன்தினம் நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோளில் 5.4புள்ளிகளாக பதிவானது. நிலநடுக்கத்தினால் பல இடங்களில் கட்டிடங்கள் சேதமடைந்தன. நிலநடுக்க சம்பவத்தில் இரண்டு பள்ளி சிறுவர்கள் உட்பட 5 பேர் காயமடைந்தனர். இந்நிலையில் நேற்று 5 முறை நிலநடுக்கம் உணரப்பட்டது. அடுத்தடுத்து நான்கு முறை நிலநடுக்கம் ஏற்பட்டதால் பொதுமக்கள் பீதி அடைந்தனர். வீடுகளை விட்டு வெளியேறி சாலைகளில் தஞ்சம் புகுந்தனர். நிலநடுக்கங்களினால் ஏற்பட்ட சேதவிவரங்கள் குறித்த தகவல் இல்லை. நீண்ட நேரத்திற்கு பின்னரே பொதுமக்கள் வீடுகளுக்கு திரும்பினார்கள்.
ஜம்முவில் 5 முறை நிலநடுக்கம்
previous post