சென்னை: மின்வாரியம் வெளியிடப்பட்டுள்ள அறிக்கை:
ஐ.டி. காரிடர் கோட்டத்திற்கு உட்பட்ட தரமணி, சி.எஸ்.ஐ.ஆர் ரோட்டில் உள்ள டைடல் பார்க் துணை மின் நிலைய வளாகத்தில் செயற்பொறியாளர் தலைமையில் நாளை காலை 10.30 மணிக்கு கூட்டம் நடைபெறுகிறது. இந்த கூட்டத்தில் பொதுமக்கள் கலந்து கொண்டு மின் தொடர்பான குறைகள் மற்றும் சந்தேகங்களை தெரிவித்து நிவாரணங்களை பெற்றுக்கொள்ளலாம். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.