தர்மபுரி, ஜூன் 12: தேய்பிறை அஷ்டமி பெருவிழாவையொட்டி, நேற்று அதியமான்கோட்டை காலபைரவர் கோயிலில் சிறப்பு வழிபாடு நடந்தது. இதையொட்டி, காலை 6 மணிக்கு காலபைரவருக்கு சிறப்பு அபிஷேகங்கள் நடந்தது. காலை 11 மணி முதல் காலபைரவர் ராஜஅலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். மாலை 6 மணிக்கு ருத்ர அபிஷேகம், சிறப்பு யாகங்கள் நடந்தன.
பள்ளிகளுக்கு கோடை விடுமுறை நேற்றுடன் முடிவதால், காலபைவரர் கோயிலுக்கு தமிழ்நாடு மற்றும் கர்நாடகா மாநில பக்தர்கள் வருகை அதிகளவில் இருந்தது. இதனால் பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று தரிசனம் செய்தனர். ஏராளமான பக்தர்கள் பூசணி விளக்கேற்றி காலபைரவரை வழிபட்டனர். இதற்கான ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறை நிர்வாகம் செய்திருந்தது.
காலபைரவர் கோயிலில் சிறப்பு வழிபாடு
previous post