துபாய்:ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் செப்டம்பர் மாதம் நடைபெற உள்ளது. பாகிஸ்தானில் தொடரை நடத்த இந்தியா எதிர்ப்பு தெரிவித்த நிலையில் தற்போது நல்ல முடிவு எடுக்கப்பட்டுள்ளது. லாகூரில் உள்ள கடாபி மைதானத்தில் நான்கு போட்டிகளை நடத்த பாகிஸ்தான் ஒப்புதல் பெற்றுள்ளது. இந்தியா, பாகிஸ்தான் மோதும் போட்டி மற்றும் இந்தியாவின் மற்ற போட்டிகள், இறுதிப் போட்டி உட்பட மீதமுள்ள ஆட்டங்கள் இலங்கையில் நடைபெறும். விரைவில் போட்டி அட்டவணை வெளியாக உள்ளது.