திண்டுக்கல்: கீழக்கோட்டை கிராமத்தில் உள்ள ஓடை பகுதியில் இருக்கும் ஆக்கிரமிப்புகளை அகற்ற உத்தரவிடப்பட்டுள்ளது. ஆக்கிரமிப்பை அகற்ற அதிகாரிகளிடம் மனு அளித்தால் நீண்டகாலம் நிலுவையில் வைப்பது கடமை தவறிய செயல் என்று நீதிபதிகள் தெரிவித்துள்ளார். ஆத்தூர் வட்டாட்சியர், மனுவை பரிசீலித்து 3 மாதங்களில் உரிய நடவடிக்கை எடுக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை அணையிட்டுள்ளது.
கீழக்கோட்டை கிராமத்தில் உள்ள ஓடையில் ஆக்கிரமிப்புகளை அகற்றக் கோரி பாண்டி என்பவர் வழக்கு தொடர்ந்துள்ளார்.