சென்னை: 4 ஏடிஜிபிக்கள் டிஜிபிக்களாக பதவி உயர்வு பெற்றுள்ளனர். இது குறித்து உள்துறைச் செயலாளர் அமுதா வெளியிட்டுள்ள உத்தரவில், ‘1992ம் ஆண்டு ஐபிஎஸ் பணியில் சேர்ந்து தற்போது ஏடிஜிபிக்களாக உள்ள ராஜீவ்குமார்(மத்திய அரசுப் பணி), சந்தீப் ராய் ரத்தோர்(ஆவடி கமிஷனர்), அபய்குமார் சிங்(லஞ்ச ஒழிப்புத்துறை இயக்குநர்), வன்னியப்பெருமாள்(போலீஸ் பயிற்சிக் கல்லூரி) ஆகியோர் டிஜிபிக்களாக பதவி உயர்வு பெற்றுள்ளனர் என்று கூறப்பட்டுள்ளது.
4 ஏடிஜிபிக்களுக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளதால், அவர்களுக்கான பணியிடங்கள் விரைவில் அறிவிக்கப்படும். ஏடிஜிபிக்கள் 4 பேருக்கும் அவர்கள் தற்போது வகிக்கும் பதவியிலேயே தொடருவதற்கான உத்தரவுகள் வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.