Sunday, September 29, 2024
Home » ரயிலில் பயணித்தபடி தரையில் கத்தியை தீட்டிய மாணவர்களால் பரபரப்பு..!!

ரயிலில் பயணித்தபடி தரையில் கத்தியை தீட்டிய மாணவர்களால் பரபரப்பு..!!

by Lavanya

சென்னை: சென்னை அடுத்த பட்டாபிராம் அருகே ரயிலில் தொங்கியபடி கத்தியை தீட்டி ரகளையில் ஈடுபட்ட மாணவர்களால் பரபரப்பு ஏற்பட்டது. சென்னை ஆவடி அருகே நேற்று பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் 10க்கும் மேற்பட்டோர் ஆல் டிக்கெட் வாங்குவதற்காக ரயில் மூலமாக சென்னையை நோக்கி செல்லக்கூடிய புறநகர் ரயிலில் வந்துள்ளனர்.

ஆவடி அருகே இந்துக்கல்லூரி சந்திப்பில் வந்தபோது கையில் வைத்திருந்த பட்டாக்கத்தியை நடைமேடையில் அச்சுறுத்தும் வகையில் வீசியதோடு, கோஷங்கள் சத்தமாக எழுப்பினர். அதுமட்டும் இன்றி ரயில் மேற்க்கூரையின் ஆபத்தான நிலையில் தொங்கிய காட்சிகள் சமூக வலைதளத்தில் வைரலாகியது. இதன் அடிப்படையில் 5 க்கும் மேற்பட்டோரை போலீசார் பிடித்து விசாரணை மேற்கொண்டதில் அவர்கள் குறிப்பிட்ட 3 பேரை தீவிரமாக தேடி வந்தனர்.

கடந்த காலங்களில் புறநகர் ரயில்களில் கல்லூரி மாணவர்கள் அட்டகாசம் அதிகரித்ததனால் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது. அனைத்து ரயில் நிலையங்களிலும் சிசிடிவி காட்சிகள் பொருத்த வேண்டும் என பல்வேறு கோரிக்கைகள் இருந்த நிலையில் மாணவர்களின் இந்த செயலால் ரயில் பயணிகள் அதிர்ச்சியுற்றனர். இந்நிலையில் ரயில் நிலையத்தில் ரகளையில் ஈடுபட்ட பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் இருவர் கைது செய்யப்பட்டனர்.

You may also like

Leave a Comment

6 + 8 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi