நீலகிரி: உதகை அரசு தாவரவியல் பூங்கா ஊழியர்கள் மீண்டும் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். காலமுறை ஊதியம் உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மீண்டும் போராட்டம் நடத்துகின்றனர். மார்ச் 23 முதல் ஏப்ரல் 18 வரை ஊழியர்கள் போராட்டம் நடத்திய நிலையில் பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டது. பேச்சுவார்த்தையில் ஒப்புக்கொண்ட கோரிக்கைகள் நிறைவேற்றப்படாததால் ஊழியர்கள் மீண்டும் போராட்டம் நடத்தி வருகின்றனர்.