சென்னை: தமிழ்நாட்டில் 25 உழவர் சந்தைகளில் தனியார் பங்களிப்புடன் தொன்மை சார் உணவகங்கள் அமைக்க அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. ஊட்டச்சத்து நிறைந்த சிறுதானிய கூழ் வகைகள், மூலிகை சூப் வகைகள், சிற்றுண்டிகளுடன் உணவகம் அமைகிறது. முதற்கட்டமாக கோவை, திண்டுக்கல், ஈரோடு, குமரி, கள்ளக்குறிச்சி, கிருஷ்ணகிரியில் உணவகம் அமைக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. மதுரை, நீலகிரி, பெரம்பலூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம், சேலம் தேனி, நெல்லையிலும் தொன்மைசார் உணவகம் அமையவுள்ளது.