சென்னை: ஓபிஎஸ், டிடிவி தினகரன் இணைந்ததால் அதிமுகவுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். அதிமுகவில் ஓபிஎஸ், டிடிவி தினகரன், சசிகலாவிற்கு எப்போதும் இடமில்லை. ஜெயலலிதா மரணம் தொடர்பான விசாரணையில் அந்தர்பல்டி அடித்தவர் ஓபிஎஸ். ஜெயலலிதா மரணத்துக்கு சசிகலா குடும்பம் மீது குற்றம்சாட்டியவர் ஓபிஎஸ். சசிகலா குடும்பத்திற்கு எதிராகத்தான் ஓபிஎஸ் தர்மயுத்தம் நடத்தினார் எனவும் கூறினார்.