Wednesday, October 2, 2024
Home » நீர் நிலைகளில் வண்டல் மண் எடுத்து கொள்ளலாம்

நீர் நிலைகளில் வண்டல் மண் எடுத்து கொள்ளலாம்

by Suresh

பெரம்பலூர்,மே 5: பெரம்ப லூர் மாவட்டத்தில் உள்ள 312 நீர் நிலைகளில் வண்டல் மண்ணை விவசாயி கள் இலவசமாக எடுத்துக் கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது என்று மாவட்ட கலெக்டர் கற்பகம் தகவல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தெரிவித்திருப்பதாவது: பெரம்பலூர் மாவட்டத்தில் பொதுப்பணித் துறை மற்றும் ஊரக வளர்ச்சித் துறை கட்டுப்பாட்டில் பெரம்பலூர் ஊராட்சி ஒன்றியத்தில் 87 நீர்நிலைகளும், ஆலத்தூர் ஊராட்சி ஒன்றியத்தில் 93 நீர்நிலைகளும், வேப்பந்த ட்டை ஊராட்சி ஒன்றியத் தில் 72 நீர்நிலைகளும், வே ப்பூர் ஊராட்சி ஒன்றியத் தில் 60 நீர்நிலைகளும் என மொத்தம் 312 நீர்நிலைக ளில் விவசாயிகள் இலவச மாக எடுத்துக் கொள்ள அறிவிப்பு செய்யப்பட்டுள்ளது. பொதுப்பணித்துறை கட்டு ப்பாட்டில் பெரம்பலூர் ஊ ராட்சி ஒன்றியத்தில் 3 ஏரி களும், ஆலத்தூர் ஊராட்சி ஒன்றியத்தில் 2 ஏரிகளும், வேப்பந்தட்டை ஊராட்சி ஒன்றியத்தில் 9 ஏரிகளும், வேப்பூர் ஊராட்சி ஒன்றிய த்தில் 13ஏரிகளும் என மொத்தம் 27 ஏரிகள் உள்ளன.

ஊரக வளர்ச்சித் துறை கட்டுப்பாட்டில் பெரம்பலூர் ஊராட்சி ஒன்றியத்தில் 84 ஏரிகளும்,குளங்களும், ஆ லத்தூர் ஊராட்சி ஒன்றிய த்தில் 91 ஏரிகளும், குளங் களும்,வேப்பந்தட்டைஊரா ட்சி ஒன்றியத்தில் 63 ஏரிக ளும், குளங்களும், வேப்பூர் ஊராட்சி ஒன்றியத்தில் 47 ஏரிகளும்,குளங்களும் என மொத்தம் 285 ஏரிகள், குள ங்கள் உள்ளன. அரசு உத்தரவு மற்றும் கனி ம விதிகளின்படி விவசாயி கள் மற்றும் பொதுமக்க ளின் சொந்த உபயோகத் திற்காக மட்டும் வண்டல் மண், களிமண், கிராவல் மண் கனிமங்களை நஞ் சை நிலம் எனில், இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை ஒரு ஏக்கருக்கு 75 கனமீட் டர் அல்லது 25 டிராக்டர் லோடுகள், புஞ்சை நிலம் எனில், இரண்டு ஆண்டுக ளுக்கு ஒருமுறை ஒரு ஏக்க ருக்கு 90 கனமீட்டர் அல்லது 30 டிராக்டர் லோடுகள், சொ ந்த வீட்டு உபயோகத்திற்கு 30 கனமீட்டர் அல்லது 10 டிராக்டர் லோடுகள் மற்றும் மண்பாண்டம் தயாரித்தல் பணிக்கு 60 கனமீட்டர் அல்லது 20 டிராக்டர் லோடுகள் என்ற அளவில் இலவசமாக எடுத்துக் கொள்ள அனுமதி வழங்கப்படும்.
இவ்வாறு அறிவிப்பு செய் யப்பட்டுள்ள நீர்நிலைகளி லிருந்து வண்டல்மண், களி மண், கிராவல் மண் எடுத் துக் கொள்ள அங்கீகரிக்கப் பட்ட மண் பரிசோதனைக் கூடம், கல்வி நிறுவன ஆய் வகத்தில் இருந்து பெறப்ப ட்ட மண் பரிசோதனை அறிக்கையுடன்பெரம்பலூர், மா வட்ட கலெக்டருக்கு விண் ணப்பித்து அனுமதிபெற்று இலவசமாக மண் எடுத்துக் கொள்ளலாம்.மேற்படி விதியின் கீழ் வண்டல் மண், களிமண், கிராவல் மண் வழங்கப்படும் அனுமதியானது வீட்டு உப யோக மற்றும் வேளாண் நோக்கத்திற்கு நீங்கலாக இதர தேவைகளுக்கு பயன் படுத்த அனுமதி இல்லை. மேற்படி விதிகளின் கீழ் மண் எடுக்க அனுமதி பெற மாவட்ட கலெக்டர், புவியி யல் மற்றும் சுரங்கத்துறை அலுவலகம், மாவட்ட கலெ க்டர் அலுவலக வளாகம், பெரம்பலூர் என்ற முகவரி க்கு விண்ணப்பித்து விவ சாயிகள் பயன்பெறலாம் எனத் தெரிவித்துள்ளார்.

You may also like

Leave a Comment

6 + ten =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi