நாகப்பட்டினம், மே4: நாகப்பட்டினம் பாப்பாகோவில் சர்ஐசக் நியூட்டன் பள்ளியின் இரண்டாம் ஆண்டு விழா பள்ளி வளாகத்தில் கொண்டாடப்பட்டது. பள்ளி ஆலோசகர் ராமதாஸ் வரவேற்றார். பள்ளி முதல்வர் வகிதா ஆண்டறிக்கை வாசித்தார். இயக்குனர் சங்கர், செயலாளர் மகேஸ்வரன் வாழ்த்துரை வழங்கினர். தொழில் நுட்புணர் சுவாமிநாதன் பேசுகையில், உடலும் அறிவும் ஒருசேர இயங்க வேண்டியதின் அவசியத்தை எடுத்துரைத்தார். பள்ளி தாளாளர் முனைவர் ஆனந்த், தலைமை வகித்தார்.
விழாவிற்கு சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட முன்னாள் துணைவேந்தர் பஞ்சநாதம் பேசுகையில், மாணவர்களுக்கு வேண்டிய அரிய கருத்துக்களை நகைச்சுவையோடு எடுத்துரைத்தார். பிறகு படிப்பில் முதன்மை வகித்த மாணவர்களுக்கும் மற்றும் பலத்துறைகளில் சிறந்து விளங்கியவர்களுக்கும் பாராட்டு பத்திரம் வழங்கினர். தொடர்ந்து கலை நிகழ்ச்சி நடந்தது. முடிவில் திருமுருகன் நன்றி கூறினார்.