சிவகாசி, ஏப். 24: அதிமுக அமைப்பு செயலாளரும் விருதுநகர் மேற்கு மாவட்ட கழக செயலாளரும் முன்னாள் அமைச்சருமான கே.டி.ராஜேந்திரபாலாஜியின் தந்தை தவசிலிங்கம் உடல்நலக்குறைவால் கடந்த ஏப்.17ம் தேதி காலமானார். அவரது மறைவிற்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நேற்று சிவகாசி அருகே திருத்தங்கல் பாலாஜி நகரில் உள்ள கே.டி.ராஜேந்திரபாலாஜியின் இல்லத்திற்கு நேரில் வருகை தந்து ஆறுதல் தெரிவித்தார்.
இதனை தொடர்ந்து கே.டி.ராஜேந்திரபாலாஜியின் தந்தையின் புகைப்படதிற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
இந்நிகழ்வின் போது முன்னாள் அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, தங்கமணி, செல்லூர் ராஜூ, ஆர்.பி.உதயகுமார், திண்டுக்கல் சீனிவாசன், கடம்பூர் ராஜூ, டாக்டர் விஜயபாஸ்கர், நத்தம் விசுவநாதன்,காமராஜ், ராஜலட்சுமி, இன்பத்தமிழன், சட்டமன்ற உறுப்பினர் ராஜன் செல்லப்பா, மான்ராஜ், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் சந்திரபிரபா, எதிர்கோட்டை சுப்பிரமணியன், சிவசாமி, சிவகங்கை மாவட்ட கழக செயலாளர் செந்தில்நாதன் எம்எல்ஏ, கடையநல்லூர் எம்எல்ஏ குட்டியப்பா, விருதுநகர் கிழக்கு மாவட்ட கழக செயலாளர் ரவிச்சந்திரன் மற்றும் அதிமுக நிர்வாகிகள் உடன் இருந்தனர்.