சென்னை: சென்னை விமான நிலைய புறப்பாடு பகுதியில் நாளை மதியம் 2.50-3.15 மணி வரை வாகனங்கள் செல்ல கட்டுப்பாடு விதித்துள்ளனர். புதிய ஒருங்கிணைந்த முனைய கட்டடம் திறப்பு, முக்கிய பிரமுகர்கள் வருகை காரணமாக கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. சென்னை விமான நிலையத்தின் புதிய ஒருங்கிணைந்த முனையக் கட்டிடத்தை பிரதமர் நரேந்திர மோடி ஏப்ரல் 8ஆம் தேதி திறந்து வைக்கிறார்.