Sunday, September 29, 2024
Home » கணவருடன் தகாத தொடர்பால் ஆத்திரம்: தேனி இளம்பெண் மீது சாணியை கரைத்து ஊற்றிய பெண்

கணவருடன் தகாத தொடர்பால் ஆத்திரம்: தேனி இளம்பெண் மீது சாணியை கரைத்து ஊற்றிய பெண்

by kannappan

மார்த்தாண்டம்: மார்த்தாண்டத்தில் சாலையோர கடையில் வேலைபார்த்துக் கொண்டிருந்த கணவரின் ஆசை நாயகி மீது பெண் சாணியை கரைத்து ஊற்றியதால் பரபரப்பு ஏற்பட்டது. குமரி மாவட்டம் மார்த்தாண்டம் பகுதியை சேர்ந்தவர் ரகுவரன் (40). மனைவி கலையரசி (35, தம்பதியின் பெயர்கள் மாற்றப்பட்டு உள்ளது). 2 பேரும் சேர்ந்து சாலையோர கடை நடத்தி வருகின்றனர். அவர்களது கடையில் தேனியை ேசர்ந்த மகேஸ்வரி (30, பெயர் மாற்றம்) கடந்த 6 வருடமாக வேலை பார்த்து வருகிறார். அப்போது ரகுவரன்-மகேஸ்வரி இடையே கள்ளக்காதல் ஏற்பட்டது. ஆசை நாயகிக்கு தனியாக வீடு எடுத்து கொடுத்தார் ரகுவரன்.மனைவிக்கு தெரியாமல் தினசரி ஆசை நாயகியை ரகசியமாக சந்தித்து உல்லாசமாக இருந்து வந்தார். இதற்கிடையே கணவரின் கள்ளக்காதல் விவகாரம் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு, கலையரசிக்கு தெரியவந்தது. இதையடுத்து தம்பதி இடையே பிரச்னை ஏற்பட்டது. தொடர்ந்து மகேஸ்வரியை வேலை விட்டு நிறுத்துமாறு கணவரிடம் கூறினார். ஆனால் அவர் ஏற்க மறுத்ததால் மனம் உடைந்த கலையரசி அளவுக்கு அதிகமாக தூக்க மாத்திரை தின்று தற்கொலைக்கு முயன்றார். பின்னர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைக்கு பிறகு வீடு திரும்பினார். அதன் பிறகு இந்த பிரச்னை மார்த்தாண்டம் காவல் நிலையத்துக்கு சென்றது. போலீசார் தம்பதியை அழைத்து விசாரித்தனர். இறுதியாக ரகுவரன் கள்ளக்காதலை கைவிடுவதாக கூறினார். இதையடுத்து மகேஸ்வரியையும் வேலையை விட்டு நிறுத்தினார். இதனால் கணவன் ஆசை நாயகியை பிரிந்து விட்டார் என்ற சந்தோஷத்தில் கலையரசி இருந்தார். ரகுவரன், ஆசை நாயகிக்கு வேறு இடத்தில் வீடு வாடகைக்கு எடுத்து கொடுத்தார். அவ்வப்போது சென்று ரகசியமாக சென்று ஆசை நாயகியை பார்த்து உல்லாசமாக இருந்து வந்தார். 2 நாட்களுக்கு முன்பு மகேஸ்வரி அருகில் உள்ள இன்னொரு சாலையோர கடையில் வேலை பார்த்துக் கொண்டு இருந்தார். இதை கலையரசி பார்த்துவிட்டார். மகேஸ்வரி மார்த்தாண்டம் பகுதியில் இல்லை என்று நினைத்த கலையரசிக்கு இது கடும் அதிர்ச்சியை கொடுத்தது.ஆகவே கணவருக்கு மீண்டும் ஆசை நாயகியுடன் தொடர்பு இருக்குமோ? என்ற சந்தேகம் அவருக்கு ஏற்பட்டது. இது குறித்து கணவரிடம் கேட்டு இருக்கிறார். ஆனாலும் கணவரின் பதிலில் தெளிவான முடிவு கிடைக்கவில்லை. இதனால் பெரும் குழப்பம் அடைந்தார். உடனே ஒரு பெரிய பக்கெட்டில் சாணியை கரைத்தார். தொடர்ந்து சாலையோர கடையில் வேலை பார்த்துக் கொண்டிருந்த, மகேஸ்வரின் அருகில் சென்று கணவரின் ஆசை நாயகி மீது சாணியை ஊற்றி திட்டி தீர்த்தார். இதை பார்த்ததும் ஏராளமான பொது மக்கள் அங்கு கூடினர். அப்போது கணவரை என்னிடம் இருந்து பிரிக்க பார்க்கிறாள் என்று கலையரசி அழுது புலம்பினார். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது….

You may also like

Leave a Comment

5 × 2 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi