மயிலாப்பூர் பகுதியில் 9 மின் திருட்டுகள் கண்டுபிடிப்பு, இழப்பீட்டுத் தொகை ரூ.9.58 இலட்சம் வசூல்

சென்னை: மயிலாப்பூர் பகுதியில் 9 மின் திருட்டுகள் கண்டுபிடித்து இழப்பீட்டுத் தொகை ரூ.9.58 இலட்சம் வசூல் செய்துள்ளனர். 10.10.2023 அன்று தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்தின் சென்னை அமலாக்க கோட்டத்தின் சென்னை/மையம், சென்னை/வடக்கு, சென்னை/தெற்கு, சென்னை/ மேற்கு, செங்கல்பட்டு மற்றும் காஞ்சிபுரம் அமலாக்க அதிகாரிகள் சென்னை/மையம் மின் பகிர்மான வட்டத்திற்குட்பட்ட மயிலாப்பூர் பகுதியில் கூட்டு ஆய்வு மேற்கொண்ட போது 9 மின் திருட்டுகள் கண்டுபிடிக்கப்பட்டது.

இதனால் ரூ.9,09,107/- (ரூபாய் ஒன்பது இலட்சத்து ஒன்பது ஆயிரத்து நூற்று ஏழு மட்டும்) இழப்பீட்டு தொகையாக மின் நுகர்வோருக்கு விதிக்கப்பட்டது. மேலும் சம்பந்தப்பட்ட மின் நுகர்வோர்கள் குற்றத்தை ஒப்புக்கொண்டு குற்றவியல் நடவடிக்கையை தவிர்க்க முன்வந்து அதற்குரிய சமரசத் தொகை ரூ.49,000/- (ரூபாய் நாற்பத்து ஒன்பதாயிரம் மட்டும்) செலுத்தியதால் அவர்கள் மீது காவல் நிலையத்தில் புகார் ஏதும் பதிவு செய்யப்படவில்லை. மின் திருட்டு சம்பந்தமான தகவல்களை செயற்பொறியாளர்/ அமலாக்கம்/சென்னை கைபேசி 9445857591 என்ற எண்ணில் தெரிவிக்கலாம்.

Related posts

பகுஜன் சமாஜ் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் உடலுக்கு மாயாவதி அஞ்சலி

பகுஜன் சமாஜ் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலையில் தென்மாவட்ட கூலிப்படைக்கு தொடர்பு உள்ளதா? போலீஸ் விசாரணை தொடர்கிறது

காற்றின் வேகமாறுபாடு காரணமாக தமிழகத்தில் 13ம் தேதி வரை மிதமான மழைக்கு வாய்ப்பு