கல்லூரியில் ராகிங் 9 பேர் சஸ்பெண்ட்

செய்யாறு: திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அறிஞர் அண்ணா அரசு கலைக்கல்லூரி விடுதியில் சீனியர் மாணவர்கள் 9 பேர், நேற்று முன்தினம் ஜூனியர் மாணவர்கள் 19 பேரை ஒருவர் பின் ஒருவராக நிற்க வைத்து சரமாரியாக அடித்துள்ளனர். இந்த வீடியோ சமூகவலைதளங்களில் வைரலானது. இதுபற்றி கல்லூரி முதல்வர் ந.கலைவாணி விசாரித்தார். ராகிங் தடுப்பு குழு உறுப்பினர்கள் மற்றும் ஆட்சி மன்ற குழு உறுப்பினர்களின் விசாரணையின் அடிப்படையில் முதலாமாண்டு மாணவர்களை அடித்து ராகிங் செய்த 2ம் ஆண்டு படிக்கும் மாணவர் ஒருவர், 3ம் ஆண்டு மாணவர்கள் 8 பேர் என 9 மாணவர்களை ஒரு மாதம் சஸ்பெண்ட் செய்து நேற்று கடிதம் வழங்கப்பட்டது.

Related posts

குமரி மாவட்டத்தில் மாலை நேர ரோந்தில் போலீசார் ஈடுபடுவார்களா?

சவுக்கு காட்டுக்குள் பயிற்சி நிலையம் சாலை,மின் விளக்கு வசதிகள் வேண்டும்

இந்திய ஒலிம்பிக் வீரர்களுடன் உரையாடிய பிரதமர் மோடி..!!