சென்னை: தமிழ்நாடு சீருடைப்பணியாளர் தேர்வு குழுமம் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழ்நாடு சீருடைப்பணியாளர் தேர்வு குழுமம் 2019ம் ஆண்டுக்கான 969 உதவி ஆய்வாளர்களுக்கான பொது விண்ணப்பதாரர்கள் மற்றும் துறை விண்ணப்பதாரர்கள் தேர்வுக்கான அறிவிப்பு கடந்த 8.3.2019ம் தேதி வெளியிட்டது. அதன்பிறகு 969 எஸ்ஐ பணியிடங்களுக்கான அனைத்து தேர்வுகளும் நடத்தி முடிக்கப்பட்டது. இறுதியாக 968 விண்ணப்பதாரர்கள் மருத்துவ தேர்வு, குணநலன்கள் மற்றும் மதிப்பெண் அடிப்படையில் தற்காலிகமாக தேர்வு செய்யப்பட்டுள்ளனர். தேர்வு செய்யப்பட்ட விண்ணப்பதாரர்களின் சேர்க்கை எண்கள் www.tnusrbonline.org என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது….