95 பவுன் நகை, பணம் கொள்ளை வழக்கில் 2 பேர் கைது

மதுரை: மதுரை மாவட்டத்தில் மேலூர்-மதுரை மெயின் ரோட்டில் உள்ள குமார்நகரை சேர்ந்தவர் பிரபுசங்கர் (45). இவர் பெங்களூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் மென் பொறியாளராக பணியாற்றி வருகிறார். அங்கேயே தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவருக்கு மேலூர் குமார் நகரில் சொந்தமாக வீடு ஒன்று உள்ளது. வீட்டில் ஆள்நடமாட்டம் இல்லாததை அறிந்த மர்மநபர்கள், கடந்த செப்.18ல் வீட்டின் பின்பக்கம் உள்ள ஜன்னலை உடைத்து, வீட்டிற்குள் நுழைந்து, பீரோவை உடைத்து, அதில் இருந்த 95 பவுன் நகை, 45 கிலோ வெள்ளி பொருட்கள் மற்றும் ரூ. 1.10 லட்சத்தை கொள்ளையடித்து சென்றனர். இதுகுறித்து வழக்கு பதிந்த போலீசார் தனிப்படை அமைத்து கொள்ளையர்களை தேடி வந்தனர். இந்நிலையில், அப்பகுதியில் கட்டுமான வேலை செய்து வந்த வடமாநிலத்தவர்கள் கொள்ளையில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து தனிப்படை போலீசார் மத்தியபிரதேசத்தை சேர்ந்த ஜெய் கிசோலன்கி (39), கைலாஸ் (50) ஆகிய 2 பேரை கைது செய்தனர். இந்தக் கொள்ளையில் தொடர்புடைய மேலும் சிலரை போலீசார் தேடி வருகின்றனர்.  கொள்ளை போன நகைகள் தொடர்பாக கைதானவர்களிடம் தீவிர விசாரணை நடந்து வருகிறது….

Related posts

செல்போனை கடலில் வீசிய தகராறில் மீனவரை செங்கலால் தாக்கி உயிருடன் புதைத்த கும்பல்: சிறுவன் கைது 4 பேருக்கு வலை

மெட்ரோ ரயில் நிலையத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்: மர்ம நபருக்கு வலை

கடன் வழங்கும் திட்டத்தில் மானியத் தொகையை விடுவிக்க லஞ்சம் வாங்கிய தொழில் மைய அலுவலக உதவியாளர் கைது: 7 பேர் கொண்ட லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி