91வது பிறந்த நாளை முன்னிட்டு தென்காசி தெற்கு மாவட்ட திமுக சார்பில் முரசொலி மாறன் படத்துக்கு மரியாதை

தென்காசி,ஆக.18: தென்காசி தெற்கு மாவட்ட திமுக சார்பில் முன்னாள் மத்திய அமைச்சர் முரசொலி மாறனின் 91வது பிறந்த நாளை முன்னிட்டு அவரது படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
கலைஞரின் மனசாட்சியாக விளங்கியவரும், திமுகவின் மூளையாக செயல்பட்டவரும், ஒன்றிய அமைச்சராக இருந்து அனைவருடைய பாராட்டுதல்களையும் பெற்று மிகச் சிறப்பாக பணியாற்றியவருமாகிய முரசொலி மாறனின் 91வது பிறந்தநாள் நேற்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி தென்காசி மாவட்ட திமுக அலுவலகமான கலைஞர் அறிவாலயத்தில் நடந்த நிகழ்ச்சிக்குத் தலைமை வகித்த மாவட்ட பொறுப்பாளர் ஜெயபாலன், முரசொலி மாறனின் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

இதைத்தொடர்ந்து மாவட்ட துணைச்செயலாளர் கென்னடி, தென்காசி மேற்கு ஒன்றியச் செயலாளர் வல்லம் திவான் ஒலி, குற்றாலம் பேரூர் செயலாளர் குட்டி, கடையநல்லூர் நகர்மன்ற தலைவர் மூப்பன் ஹபீபுர் ரஹ்மான், மாவட்ட பிரதிநிதிகள் பொன்செல்வன், செல்வம், அரசு வக்கீல்கள் வேலுச்சாமி, முத்துக்குமாரசாமி, மாணவர் அணி மாவட்ட அமைப்பாளர் ரமேஷ், மாவட்ட சிறுபான்மை பிரிவு சேக் முகமது, வக்கீல் அணி மாவட்ட துணை அமைப்பாளர் ரகுமான்சாதத், அயலக அணி மாவட்ட துணை அமைப்பாளர்கள் ராமராஜ், முத்துசுப்பிரமணியன், நசீர், தொழிலாளர் அணி மாவட்ட துணை அமைப்பாளர் கரிசல் வேல்சாமி, டாக்டர் மாரிமுத்து, பேச்சாளர் வெல்டிங் மாரியப்பன், சுந்தரேசன், காளி, பாப்பா, கரையாளனூர் சண்முகவேல், பிரேம்குமார், சண்முகநாதன், ஒன்றிய துணை செயலாளர் ஐடிஐ ஆனந்த், சுந்தர்ராஜ், ஐந்தாங்கட்டளை பஞ். துணைத்தலைவர் சுதன், பவுல் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

Related posts

மணல் கடத்திய டிராக்டர் டிப்பர் பறிமுதல்

உளுந்தூர்பேட்டையில் அக். 2ம் தேதி விசிக மது ஒழிப்பு மகளிர் மாநாடு ஆயத்தப் பணி

ஆசிரியரை பீர் பாட்டிலால் தாக்கி கொலை மிரட்டல்