அதற்காக 90 பேரின் ஆதார் கார்டு, பான் கார்டு உள்ளிட்ட ஆவணங்களை பெற்றுள்ளார். பின்னர், வங்கியின் மேலாளரான கோவை கணபதி நகரை சேர்ந்த கவுதம்(33) உடந்தையோடு மோசடியாக ரூ.90 லட்சம்(ஒரு குழுவுக்கு ஒரு லட்சம் வீதம்) கடன் பெற்றுள்ளனர். இதில், கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் மகளிர் சுய உதவிக்குழுவினர் ஒவ்வொருவருக்கும் ரூ.10 ஆயிரம் மட்டும் கொடுத்து விட்டு, தலா ரூ.90 ஆயிரத்தையும் இருவரும் கையாடல் செய்துள்ளனர்.
இந்நிலையில், மகளிர் சுய உதவிக்குழுவினருக்கு வங்கியில் இருந்து ரூ.1 லட்சம் கடன் தொகையை வட்டியுடன் செலுத்தும்படி கடந்த வாரம் நோட்டீஸ் சென்றுள்ளது. அதிர்ச்சி அடைந்த 9 சுய உதவிக்குழுவை சேர்ந்த பெண்களும் நேற்று முன்தினம் சமாதான பேச்சுக்காக லோன் புரோக்கர் முகமது ரபிக் மற்றும் வங்கி மேலாளர் கவுதம் ஆகிய இருவரையும் வரவழைத்து, ஜோலார்பேட்டை போலீசாரிடம் ஒப்படைத்தனர்.இதையடுத்து மோசடியில் ஈடுபட்ட வங்கி மேலாளர் கவுதம், லோன் புரோக்கர் முகமது ரபிக் ஆகிய இருவரையும் போலீசார் நேற்று கைது செய்தனர்.