9 வயது சிறுவன் திடீர் தற்கொலை குடியாத்தம் அருகே அதிர்ச்சி

குடியாத்தம், மே 10: குடியாத்தம் அருகே 9 வயது சிறுவன் திடீரென தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. வேலூர் மாவட்டம் குடியாத்தம் தரணம்பேட்டையை சேர்ந்தவர் தனியார் நிறுவன ஊழியர். இவரது 9 வயது மூத்த மகன் அரசு நிதியுதவி பெறும் பள்ளியில் 4ம் வகுப்பு படித்து வந்தார். பள்ளி விடுமுறை காரணமாக வீட்டில் இருந்து வந்த இவர் நேற்று மதியம் திடீரென படுக்கை அறையின் கதவை தாழிட்டு கொண்டு, புடவையால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொள்ள முயன்றார். இதை பார்த்து அதிர்ச்சியடைந்த பெற்றோர் மற்றும் அக்கம்பக்கத்தினர் கதவை உடைத்து உள்ளே சென்று மயங்கிய நிலையில் கிடந்த சிறுவனை மீட்டு உடனடியாக குடியாத்தம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள், சிறுவன் ஏற்கனவே இறந்துவிட்டதாக கூறி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்த புகாரின்பேரில் குடியாத்தம் டவுன் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். டிவி மற்றும் செல்போனை அதிக நேரம் பார்க்கும் பழக்கம் கொண்ட சிறுவன், அதில் எதையாவது பார்த்து இதுபோன்ற முடிவு எடுத்திருக்கலாம் என குடும்பத்தினர் கூறியதாக போலீசார் தெரிவித்தனர். 9 வயது சிறுவன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது.

Related posts

நண்பரை குத்தி கொல்ல முயற்சி வாலிபருக்கு 10 ஆண்டு சிறை சிறப்பு நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

மதுபாட்டில் வைத்திருந்த 2 பேர் கைது

சாலையோரம் குவிந்து கிடந்த மாணவர்களின் சீருடைகள்: போலீசார் விசாரணை