ஆட்டோ மீது லாரி மோதி 8 மாணவர்கள் படுகாயம்


திருமலை: ஆந்திராவில் மாணவர்களை ஏற்றிச்சென்ற ஆட்டோ மீது லாரி மோதியதில் 8 மாணவ, மாணவிகள் படுகாயமடைந்தனர்.ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் பள்ளிக்கு செல்லும் மாணவ, மாணவிகளை ஏற்றிக்கொண்டு ஒரு ஆட்டோ இன்று காலை சென்று கொண்டிருந்தது. ஆர்டிசி பஸ் நிறுத்தம் அருகே உள்ள சரத் தியேட்டர் சந்திப்பில் ஆட்டோ சாலையை கடந்தபோது வேகமாக வந்த லாரி அந்த ஆட்டோ மீது மோதியது. இதில் ஆட்டோ தூக்கிவீசப்பட்டு தலைகீழாக கவிழ்ந்து நொறுங்கியது. இந்த விபத்தில் ஆட்டோவில் இருந்த 8 மாணவ, மாணவிகள் சாலையில் உருண்டு விழுந்து படுகாயம் அடைந்தனர்.

அவர்களை, அவ்வழியாக வாகனங்களில் சென்றவர்கள் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. விபத்து நடந்தவுடன் லாரியை நிறுத்தாமல் அதன் டிரைவர் ஓட்டிச்சென்றார். இதை பார்த்த பொதுமக்கள், அவரை விரட்டி சென்று மடக்கி பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்.இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related posts

ஓணம் பண்டிகைக்கு ரூ.818 கோடி மது விற்பனை: கடந்த வருடத்தை விட ரூ.9 கோடி அதிகம்

குழந்தை தொழிலாளர் விவகாரம் சமாஜ்வாடி எம்எல்ஏ நீதிமன்றத்தில் சரண்

டெல்லி முதல்வராக அடிசி நாளை பதவியேற்கிறார்: முகேஷ் புதிய அமைச்சர்