திருப்பூரில் பொதுமக்களை கடித்த 8 வெறிநாய்கள்

திருப்பூர்: திருப்பூர் குமரன் சாலையில் பொதுமக்களை கடித்த 8 வெறிநாய்களை தனியார் அமைப்பினர் பிடித்துச் சென்றனர். திருப்பூர் மாநகராட்சிக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் வெறி நாய்கள் அதிகரித்த வண்ணம் உள்ளது. திருப்பூரில் கடந்த சில நாட்களாக வெறிநாய்கள் கடித்ததில் குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை பலர் காயம் அடைந்தனர். திருப்பூர் மாநகராட்சியின் 36-வது வார்டில் குமரன் சாலையில் நேற்று வெறி நாய்கள் கடித்ததில் பேபி என்பவர் காயம் அடைந்தார்.

Related posts

திருப்பதி அன்ன பிரசாதத்தில் பூரான் இருந்ததாக கூறப்படும் செய்தி முற்றிலும் தவறானது: திருமலை தேவஸ்தானம் விளக்கம்

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை முன்கூட்டியே தொடங்கும்.! இயல்பைவிட கூடுதல் மழை பெய்யும்: வானிலை ஆய்வு மையம் தகவல்

ரத்த அழுத்தத்தை சீராக்கும் ‘பேஷன்’ பழம்: ஊட்டியில் கிலோ ரூ.400க்கு விற்பனை