810 மெகவாட் மின் உற்பத்தி நிறுத்தம்

 

மேட்டூர், ஜூன் 3: மேட்டூர் அனல் மின் நிலையத்தில் 810 மெகவாட் மின் உற்பத்தி நிறுத்தம் செய்யப்பட்டுள்ளது. மேட்டூர் அனல் மின் நிலையத்தில் இரண்டு பிரிவுகள் செயல்பட்டு வருகின்றன. முதல் பிரிவில் தலா 210 மெகாவாட் திறன் கொண்ட நான்கு அலகுகளும், 2வது பிரிவில் 600 மெகாவாட் திறன் கொண்ட ஒரு அலகும் செயல்பட்டு வருகிறது. இவற்றின் மூலம் 1440 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்ய முடியும். தற்போது காற்றாலை மின் உற்பத்தி அதிகரித்து உள்ளதால், மேட்டூர் அனல் மின் நிலையத்தில், 2வது பிரிவில் 600 மெகாவாட் மின் உற்பத்தி முழுமையாக நிறுத்தப்பட்டது.

முதல் பிரிவில் 4வது அலகில் மட்டும் 210 மெகாவாட் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது. மின் தேவை அதிகரித்தால், மீண்டும் நிறுத்தப்பட்ட அலகுகளில், மின் உற்பத்தி துவக்கப்படும் என அனல் மின் நிலைய பொறியாளர்கள் தெரிவித்துள்ளனர். தற்போது முதல் பிரிவில் உள்ள 3அலகுகளில் 630 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது.

Related posts

கர்நாடகாவில் கொலை குற்றவாளி கைது

மாடிக்கு கம்பியை எடுத்து சென்றபோது மின்சாரம் தாக்கி தொழிலாளி பலி

ஏற்காட்டில் குற்றச்சம்பவங்களை தடுக்க டிஎஸ்பி தலைமையில் போலீசார் வாகன தணிக்கை