80 வயது ஓய்வூதியர்கள் கவுரவிப்பு

உடுமலை, செப். 7: தமிழ்நாடு ஓய்வு பெற்ற அரசு ஊழியர் சங்கத்தின் உடுமலை வட்டக் கிளைக் கூட்டம் நடைபெற்றது. சங்கத்தின் தலைவர் சேஷாசலம் தலைமை தாங்கினார். செயலாளர் சாமிநாதன் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் சிறப்பு விருந்தினர்களாக சங்கத்தின் மாநிலச் செயலாளர் ஞானசேகரன், மாவட்டத் தலைவர் பழனிச்சாமி ஆகியோர் கலந்து கொண்டனர். சங்கத்தின் வட்ட, மாவட்ட, மாநிலச் செயல்பாடுகள் பற்றி விவாதிக்கப்பட்டன. ஓய்வூதியர்களின் காப்பீட்டுத் திட்டம் ஆண்டு நேர்காணல் மற்றும் ஊக்க ஊதிய உயர்வு பற்றி பல்வேறு விளக்கங்கள் அளிக்கப்பட்டன.

கூட்டத்தில் மாவட்டத் துணைத் தலைவர் தங்கவேலு, மாவட்டத் துணைச் செயலாளர் கிருஷ்ணமூர்த்தி, பொருளாளர் ராமமூர்த்தி, துணைத் தலைவர்கள் ரகோத்தமன், காளியப்பன், துணைச் செயலாளர் தண்டபாணி மற்றும் ஓய்வூதியர்கள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் 80 வயது நிறைவு பெற்ற ஓய்வூதியர்கள் கௌரவிக்கப்பட்டனர்.

Related posts

கும்பகோணத்தில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

திருக்காட்டுப்பள்ளியில் மாபெரும் பெட்டிஷன் மேளா

அரசு பள்ளி மாணவர்கள் தூய்மை திருவிழா விழிப்புணர்வு பேரணி