இதனையடுத்து போலீசார் இருவரையும் காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர். இதில் பணத்தை கொடுத்தவர் வியாசர்பாடி எம்கேபி நகர், 13வது குறுக்கு தெருவை சேர்ந்த ரவி (எ) சுரேஷ்குமார் (36) என்பதும், அதனை வாங்கியவர் விழுப்புரம் மாவட்டம், செஞ்சி தாலுகா பகுதியை சேர்ந்த யாசோபுத்திரன் (25) என்பதும் தெரிய வந்தது. ரவி என்பவர் வியாசர்பாடியில் 2 இடங்களில் காயலான் கடை நடத்தி வந்துள்ளார். இவர் செங்குன்றம் பகுதியில் இரும்புக்கடை நடத்தி வரும் செல்வன் என்பவரிடம் சமீபத்தில் 2 லோடு இரும்பு எடுத்துள்ளார். அதற்குரிய பணத்தை யாசோபுத்திரன் மூலமாக கொடுத்து அனுப்பியது தெரிந்தது. பின்னர் உரிய ஆவணங்களை இருவரும் காவல் நிலையத்தில் சமர்ப்பித்துவிட்டு பணத்தை பெற்றுச் சென்றனர்.