8 வருடங்களுக்குப் பிறகு மீண்டும் ஒரு பாடலுக்கு ஆடுகிறார் சன்னி லியோன்

சென்னை: கனடாவை சேர்ந்தவரான சன்னி லியோன், தற்போது பாலிவுட் படங்களில் நடித்து வருகிறார். வி.சி.வடிவுடையான் இயக்கத்தில் தமிழில் அவர் நடிப்பதாக அறிவிக்கப்பட்ட ‘வீரமாதேவி’ படம், பல்வேறு காரணங்களால் கைவிடப்பட்டது. தற்போது ஆர்.யுவன் இயக்கத்தில் ‘ஓ மை கோஸ்ட்’ படத்தில் ஹீரோயினாக நடிக்கும் சன்னி லியோன், கடந்த 2014ல் ‘வடகறி’ என்ற படத்தில் ஜெய்யுடன் சேர்ந்து ஒரு பாடலுக்கு ஆடினார். இந்நிலையில், 8 வருடங்களுக்குப் பிறகு ‘தீ இவன்’ படத்தில் மீண்டும் ஒரு பாடலுக்கு நடனம் ஆடுகிறார். இந்தப் படத்தை ‘ரோஜா மலரே’, ‘சிந்துபாத்’, ‘அடடா என்ன அழகு’ ஆகிய படங்களை இயக்கி இருந்த டி.எம்.ஜெயமுருகன் இசை அமைத்து இயக்குகிறார். மனிதன் சினி ஆர்ட்ஸ் சார்பில் நிர்மலா தேவி தயாரிக்கிறார். கார்த்திக், சுகன்யா, ராதாரவி, சுமன்.ஜெ, சிங்கம்புலி, ஜான் விஜய் நடிக்கின்றனர். ஒய்.என்.முரளி ஒளிப்பதிவு செய்ய, ஏ.ஜே.அலி மிர்சா பின்னணி இசை அமைக்கிறார். இதுகுறித்து டி.எம்.ஜெயமுருகன் கூறுகையில், ‘தமிழ் கலாச்சாரத்தையும், குடும்ப உறவுகளையும் சொல்லும் கதை கொண்ட இந்தப் படத்தில், ‘மேலே ஆகாயம், கீழே பாதாளம், நடுவில் ஆனந்தம், கொண்டாடு தோழி’ என்ற பாடல் காட்சியில் ஆட வேண்டும் என்று கேட்டு, மும்பை வீட்டில் சன்னி லியோனை சந்தித்தேன். படத்தின் முழு கதையையும் கேட்ட பிறகுதான் ஆட அவர் சம்மதித்தார். இப்பாடல் காட்சி வரும் நவம்பர் 15ம் தேதி சென்னையில் பிரமாண்ட செட் அமைத்து படமாக்கப்படுகிறது’ என்றார்….

Related posts

அனைத்து வகைகளிலும் வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள தயார்: அமைச்சர் கே.என்.நேரு பேட்டி

அரக்கோணம், ரேணிகுண்டா, கூடூர் வழித்தடத்தில் விபத்து குறித்து எச்சரிக்கை செய்யும் ‘கவாச்’ தொழில்நுட்பம் அறிமுகம்:டெண்டர் கோரியது தெற்கு ரயில்வே

தண்டையார்பேட்டை வினோபா நகரில் தீவிரவாத அமைப்புடன் தொடர்புடையவர் கைது: போலீசார் தீவிர விசாரணை