8 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்ட வழக்கில் அசாம் இளைஞருக்கு சாகும் வரை சிறை: போக்சோ நீதிமன்றம் தீர்ப்பு

விருதுநகர்: 8 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்ட வழக்கில் அசாம் இளைஞருக்கு சாகும் வரை சிறை தண்டனையுடன் ரூ. 25,000 அபராதமும் விதித்து ஸ்ரீவில்லிபுத்தூர் போக்சோ நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சிவகாசி அருகே கொங்கலாபுரத்தை சேர்ந்த 8 வயது சிறுமி 2020, ஜனவரி 20-ம் தேதி பள்ளிக்கு சென்றவர் திரும்பி வரவில்லை. பெற்றோர் குழந்தையை தேடிவந்த நிலையில், மறுநாள் சிறுமி சடலமாக மீட்கப்பட்டார். உடற்கூறு ஆய்வில் சிறுமி கொடூரமான முறையில் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டிருப்பது தெரியவந்தது. சிறுமி பலாத்காரம், கொலை தொடர்பாக விசாரித்த சிவாகாசி போலீசார் அசாமைச் சேர்ந்த மஜம் அலி என்பவரை கைது செய்தனர். இந்த வழக்கனது ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் அமைந்துள்ள போக்சோ நீதிமன்றத்தில் கடந்த 2 வருடங்களாக நடைபெற்றது. இந்நிலையில், இன்று நீதிபதி தீனதயாளன் குற்றவாளிக்கு சாகும் வரை சிறை தண்டனையுடன் ரூ. 25,000 அபராதமும் விதித்துள்ளார். …

Related posts

சென்னையில் உள்ள காவல் நிலையங்களில் குழந்தைகள் நல அதிகாரிகளாக நியமிக்கப்பட்டிருக்கும் காவல் அதிகாரிகள் மற்றும் ஆளினர்களுக்கு ஒரு நாள் பயிற்சி வகுப்பு

கரூர் மாவட்டம் நொய்யல் ஆத்துப்பாளையம் நீர்த்தேக்கத்திலிருந்து நீர் திறக்க உத்தரவு

2024 – 2025 ஆம் கல்வியாண்டிற்கான சித்தா, யுனானி மற்றும் ஓமியோபதி மருத்துவ முதுநிலை பட்டப் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை அறிவிப்பு