தென்காசி: கொரோனா தொற்று 2வது அலை பரவல் காரணமாக, குற்றாலத்தில் குளிப்பதற்கு கடந்த ஏப்.16ம் தேதி முதல் தடை விதிக்கப்பட்டது. அதன் பிறகு பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்ட போதும் குற்றாலம் அருவிகளில் குளிப்பதற்கு அனுமதி தரப்படவில்லை. தமிழகத்தில் உள்ள அனைத்து சுற்றுலா தலங்களும் திறக்கப்பட்டுள்ள நிலையில், குற்றால அருவிகளில் குளிப்பதற்கும் அனுமதி அளிக்க வேண்டுமென சுற்றுலா பயணிகள், கோரிக்கை விடுத்து வந்தனர். இந்நிலையில் வருகிற டிச.20ம் தேதி முதல் குற்றாலம் அருவிகளில் சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கு அனுமதி அளிக்கப்படுவதாக தென்காசி மாவட்ட கலெக்டர் கோபால சுந்தர்ராஜ் அறிவித்துள்ளார்….