ஊத்துக்கோட்டை: ஊத்துக்கோட்டை அருகே ஆந்திர மாநிலம் பிச்சாட்டூர் கிராமத்தை சேர்ந்தவர் பாப்புலம்மா(75). இவர் கடந்த 2 நாட்களுக்கு முன்பு தனது உறவினர் வீட்டிற்கு செல்வதற்காக ஊத்துக்கோட்டை நான்கு முனை சந்திப்பிலிருந்து பேருந்து ஏறினார். பேந்து தான் கட்டைப்பையில் வைத்திருந்த மணி பர்சை எடுத்து பார்த்தபோது அதில் வைத்திருந்த 7 1/2 சவரன் நகை காணாமல் போனதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். பின்னர் இது குறித்து ஊத்துக்கோட்டை காவல் நிலையத்தில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் ஏழுமலை வழக்கு பதிவு செய்து, மூதாட்டி பேருந்து ஏறிய இடத்தின் அருகில் உள்ள கடையில் சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து விசாரணை நடத்தினர்.
அப்போது மூதாட்டி பேருந்தில் ஏறும்போது அவரை பின் தொடர்ந்து 3 பெண்கள் பஸ்சில் ஏறுவதும், ஏறிய வேகத்தில் உடனே இறங்கியுள்ளனர். விசாரணையில் அந்த பெண்கள் 3 பேரும் திருத்தணி அருகே உள்ள நல்லாத்தூர் பகுதியை சேர்ந்தவர்கள் என தெரிய வந்தது. நதியா(30), கல்யாணி(24), அனிதா(30) அவர்களை நேற்று கைது செய்து விசாரணை நடத்தினார். அதில் அவர்கள் நகையை திருடியதை ஒப்புக்கொண்டனர். பின் அவர்களிடம் இருந்து 7 1/2 சவரன் நகையை பறிமுதல் செய்தார். அந்த 3 பெண்களையும் கைது செய்து ஊத்துக்கோட்டை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்