இதை எதிர்த்து தமிழ்நாடு மின்சார வாரிய கணக்காயர் மற்றும் களத் தொழிலாளர்கள் சங்கத்தின் சார்பில் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு, நீதிபதி என்.செந்தில்குமார் முன் விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சங்கம் தரப்பில் மூத்த வழக்கறிஞர் சிங்காரவேலன், தமிழக அரசு தரப்பில் தலைமை வழக்கறிஞர் பி.எஸ்.ராமன், டான்ஜெட்கோ தரப்பில் மூத்த வழக்கறிஞர் வில்சன் ஆஜராகினர். அனைத்து வாதங்களையும் கேட்ட நீதிபதி, 50 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் டான்ஜெட்கோவில் பணியாற்றும் நிலையில், 79 பேர் மட்டும் இடமாற்றம் செய்யப்படுவதாகவும், இடமாற்றம் செய்ய அரசுக்கு அதிகாரம் உள்ளதாகவும், முத்தரப்பு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ள நிலையில், அது மனுதாரர் சங்கத்தை கட்டுப்படுத்தும் என கூறி, வழக்கை தள்ளுபடி செய்தார்.