75வது பிறந்த நாள்; புதுவை முதல்வர் ரங்கசாமிக்கு ஜனாதிபதி, பிரதமர் வாழ்த்து

புதுச்சேரி: புதுச்சேரி முதல்வர் ரங்கசாமியின் 75வது பிறந்தநாளை முன்னிட்டு அவருக்கு ஜனாதிபதி, பிரதமர் வாழ்த்து தெரிவித்தனர். புதுச்சேரி முதல்வர் ரங்கசாமியின் 75வது பிறந்தநாளையொட்டி அவரது ஆதரவாளர்கள் நேற்று நள்ளிரவு 12 மணிக்கு அவரது வீட்டின் அருகே பட்டாசு வெடித்து கொண்டாடினர். தொடர்ந்து இன்று காலை திலாஸ்பேட்டையில் உள்ள அவரது வீட்டில் அமைச்சர்கள், எம்எல்ஏக்கள், என்.ஆர்.காங்கிரஸ் நிர்வாகிகள், அரசு அதிகாரிகள், கட்சி தொண்டர்கள் முதல்வரை சந்தித்து வாழ்த்து கூறினார்.

தொடர்ந்து ஜனாதிபதி திரவுபதி முர்மு தொலைபேசி மூலம் முதல்வர் ரங்கசாமியை தொடர்பு கொண்டு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தார். மேலும் பிரதமர் ேமாடி, மாநிலங்களவை சபாநாயகர் ஓம் பிர்லா, மத்திய அமைச்சர் மான்சுவிக் மாண்டியா ஆகியோர் எக்ஸ் தளத்தில் முதல்வர் ரங்கசாமிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளனர். பின்னர் கதிர்காமம் கதிர்வேல்சுவாமி கோவிலில் சிறப்பு பூஐையில் முதல்வர் ரங்கசாமி கலந்து கொண்டார்.

 

Related posts

வங்கதேசத்திற்கு எதிரான தொடர்; இந்திய டெஸ்ட் அணியின் துணை கேப்டன் யார்?.. குழப்பத்தில் ரசிகர்கள்

செப்.20ம் தேதி முதல் காலாண்டுத் தேர்வு

இந்தியாவில் இளைஞர் ஒருவருக்கு குரங்கு அம்மை பாதிப்பு உறுதி: ஒன்றிய அரசு தகவல்