75வது சுதந்திர தின விழா கொண்டாட்டம் பாத யாத்திரையை தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி

அகமதாபாத்: 75வது சுதந்திர தின கொண்டாட்டத்தை முன்னிட்டு குஜராத்தில் பாத யாத்திரையை பிரதமர் மோடி நேற்று தொடங்கி வைத்தார். நாட்டின்  75வது ஆண்டு சுதந்திர தின விழாவை ”அசாத் கா அம்ருத் மகேட்சவ்” என்ற பெயரில் மத்திய அரசு கொண்டாடுவதற்கு திட்டமிட்டுள்ளது. இதனை முன்னிட்டு 75வது ஆண்டு சுதந்திர தின விழா கொண்டாட்டம் குஜராத்தில் நேற்று தொடங்கியது. இதற்காக குஜராத் வந்த பிரதமர் மோடி அகமதாபாத் விமான நிலையத்தில் இருந்து சபர்மதி ஆசிரமம் சென்றார். அங்கு மகாத்மா காந்தி சிலைக்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார். மகாத்மா காந்தி 1930ம் ஆண்டு மார்ச் 12ம் தேதி தண்டி யாத்திரையை தொடங்கினார். இதை நினைவுகூறும் வகையில், குஜராத்தின் சபர்மதி ஆசிரமத்தில் இருந்து பாத யாத்திரை மேற்கொள்ளப்படவுள்ளது. பிரதமர் நரேந்திரமோடி, நேற்று இந்த பாத யாத்திரையை கொடி அசைத்து தொடங்கி வைத்தார். 81 பேர் சபர்மதி ஆசிரமத்தில் இருந்து நவ்சாரியில் உள்ள தண்டி வரை 386 கி.மீ. தொலைவுக்கு யாத்திரை மேற்கொள்கின்றனர். 25 நாட்களுக்கு பின்னர் ஏப்ரல் 5ம் தேதி இந்த யாத்திரை நிறைவு பெறும். 75வது ஆண்டு சுதந்திர தின கொண்டாட்டம் 2023ம் ஆண்டு ஆகஸ்ட் 15ம் தேதி வரை கடைப்பிடிக்கப்படும் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்….

Related posts

தேர்வில் முறைகேடு குற்றச்சாட்டுக்கு மத்தியில் நீட் கவுன்சலிங் திடீர் ஒத்திவைப்பு: ஜூலை இறுதியில் நடக்க வாய்ப்புள்ளதாக தகவல்

நாடாளுமன்றம் 22ம் தேதி கூடுகிறது ஜூலை 23ல் ஒன்றிய பட்ஜெட்: நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்கிறார்

மார்க்சிஸ்ட் கட்சியின் வீழ்ச்சி கவலை தருகிறது: மத்தியக்குழு பரபரப்பு அறிக்கை