புதுடெல்லி: மக்களவையில் 700 மசோதாக்கள் நிலுவையில் உள்ளதாக தகவல்கள் வௌியாகி உள்ளன. 2019 நாடாளுமன்ற தேர்தலுக்கு பின், தற்போதுள்ள ஆட்சியில் மக்களவையில் கடந்த ஜுன் மாதம் இந்த மசோதாக்கள் அறிமுகப்படுத்தப்பட்டன. அவற்றில் சில ஆகஸ்ட் மாத மழைக்கால கூட்டத்தொடரில் தாக்கல் செய்யப்பட்டன. இந்நிலையில் தண்டனை சட்டங்களில் திருத்தம், தேர்தல் விதிகளில் மாற்றம் கொண்டு வருவது போன்ற 713 மசோதாக்கள் மக்களவையில் நிலுவையில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.