சென்னை: ரூ.70 கோடி கடன் பெற்றுத் தருவதாக கூறி, ரூ.1.40 கோடி மோசடி செய்த காரைக்குடியை சேர்ந்த பாஜக மாநில விவசாய அணி துணைத் தலைவர் ராஜசேகர் உட்பட 4 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். இமாச்சலப் பிரதேசத்தை சேர்ந்த ஹரிந்தர் பால் சிங் என்பவர் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் அளித்த புகாரில் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.