7வது வார்டு மக்களின் வாழ்க்கை மேம்பட பாடுபடுவேன்: சுயேச்சை வேட்பாளர் ஆதிகுருசாமி உறுதி

திருவொற்றியூர்: திருவொற்றியூர் மண்டலம் 7வது வார்டில், தண்ணீர் குழாய் சின்னத்தில் சுயேச்சையாக போட்டியிடும் பொ.ஆதிகுருசாமி நேற்று கார்கில் நகரில் குடும்பத்துடன் வீதி வீதியாக சென்று வாக்கு சேகரித்தார். பொதுமக்கள் அவரை உற்சாகமாக வரவேற்றனர். அப்போது அவர் பேசுகையில், ‘‘நான் இந்த பகுதியில் கடந்த 25 ஆண்டுகளாக மக்களோடு மக்களாக வாழ்ந்து, மழை, வெள்ளம், புயல் போன்ற காலங்களில் என்னால் முடிந்த உதவிகளை செய்துள்ளேன்.திருவொற்றியூரில், தளபதி மு.க.ஸ்டாலின் நற்சேவை மையம் மூலம் எனது சொந்த பணத்தில் ஏழை எளிய மக்களுக்கு, கல்லூரி, பள்ளி மாணவ மாணவிகளுக்கு பாடப்புத்தகம், கல்விக் கட்டணம் என பல்வேறு உதவிகளை செய்துள்ளேன். விதவைகள், முதியவர்கள், மாற்றுத் திறனாளிகள் பலருக்கு அரசின் உதவித்தொகை பெற்று தந்துள்ளேன். இனிவரும் காலங்களிலும் உங்களின் வாழ்க்கை மேம்பட பாடுபடுவேன். அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்வேன். எனவே, உங்கள் வீட்டு பிள்ளையான எனக்கு வரிசை எண் 2ல் உள்ள பொ.ஆதிகுருசாமி, தண்ணீர் குழாய் சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெற செய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன்,’’ என்றார். அப்போது அங்கிருந்த பொதுமக்கள், நாங்கள் வாக்காளர்கள் மட்டுமல்ல உங்களது உறவினரை போன்றவர்கள். எங்களது ஓட்டு உங்களுக்குத்தான். எங்களுக்காக உழைத்த உங்களை வெற்றியடைய செய்வது எங்களது கடமை, என்று கூறி அவரை வாழ்த்தினர்….

Related posts

அங்கீகாரம் கொடுத்த பிரதமர் மோடியின் முதுகில் குத்திய துரோகி எடப்பாடி பழனிசாமி: அண்ணாமலை கடும் விமர்சனம்

சிலர் சுயலாபத்துடன் செயல்படுவதால் அதிமுக அழிகிறது, எடப்பாடி ஒரு நம்பிக்கை துரோகி : அண்ணாமலை

புதிய குற்றவியல் சட்டங்களை உடனடியாகத் திரும்பப்பெற வேண்டும்: ஒன்றிய அரசுக்கு சீமான் கோரிக்கை