7ம் வகுப்பு மாணவி பலாத்காரம் போக்சோவில் பள்ளி முதல்வர் கைது

மும்பை: மும்பையில் 7ம் வகுப்பு மாணவியை பலாத்காரம் செய்த தனியார் பள்ளி முதல்வரை போலீசார் கைது செய்தனர். மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் செயல்படும் தனியார் பள்ளியில் விடுதியில் தங்கியிருந்த 14 வயது மாணவியை, கடந்தாண்டு நவம்பரில் பாலியல் பலாத்காரம் செய்த புகாரின் அடிப்படையில், அந்தப் பள்ளியின் முதல்வர் கைது செய்யப்பட்டார். இதுகுறித்து போலீஸ் அதிகாரிகள் கூறுகையில், ‘பாதிக்கப்பட்ட மாணவி அந்தப் பள்ளியில் 7ம் வகுப்ப படித்து வருகிறார்; அவரது தங்கையும், சகோதரனும் அதேப் பள்ளியில் படித்து வருகின்றனர். சம்பந்தப்பட்ட மாணவியை தனது அறைக்கு அழைத்த 65 வயது மதிக்கத்தக்க பள்ளியின் முதல்வர், அந்த சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். மேலும், இந்த சம்பவம் குறித்து யாரிடமும் பேசக் கூடாது; இல்லையெனில் பள்ளியை விட்டு நீக்கிவிடுவேன்; கொன்றுவிடுவேன் என்று அச்சுறுத்தியுள்ளார். அவரது அச்சுறுத்தலுக்குப் பயந்த அந்த சிறுமி, தனது பெற்றோரிடம் சில வாரங்கள் தனக்கு நேர்ந்த கொடுமையை தெரிவிக்காமல் இருந்தார். கடந்த சில நாட்களுக்கு முன் தனது ெபற்றோரின் வற்புறுத்தலின் பேரில், தனக்கு நேர்ந்த கொடுமையை மாணவி கூறினார். அதிர்ச்சியடைந்த பெற்றோர் கொடுத்த புகாரின் அடிப்படையின் பள்ளியின் முதல்வர் மீது போக்சோ உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குபதிந்து கைது செய்துள்ளோம்’ என்றனர். …

Related posts

புதிய பாட்டிலில் பழைய மது… புதிய குற்றவியல் சட்டங்கள் குறித்து ஓய்வுபெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி ஜஸ்டி செல்லமேஸ்வர் கடும் விமர்சனம்

பாஜக மூத்த தலைவர் அத்வானி மீண்டும் மருத்துவமனையில் அனுமதி

தாயகம் வந்தது இந்திய கிரிக்கெட் அணி