7வது வார்டு மக்களின் வாழ்க்கை மேம்பட பாடுபடுவேன்: சுயேச்சை வேட்பாளர் ஆதிகுருசாமி உறுதி

திருவொற்றியூர்: திருவொற்றியூர் மண்டலம் 7வது வார்டில், தண்ணீர் குழாய் சின்னத்தில் சுயேச்சையாக போட்டியிடும் பொ.ஆதிகுருசாமி நேற்று கார்கில் நகரில் குடும்பத்துடன் வீதி வீதியாக சென்று வாக்கு சேகரித்தார். பொதுமக்கள் அவரை உற்சாகமாக வரவேற்றனர். அப்போது அவர் பேசுகையில், ‘‘நான் இந்த பகுதியில் கடந்த 25 ஆண்டுகளாக மக்களோடு மக்களாக வாழ்ந்து, மழை, வெள்ளம், புயல் போன்ற காலங்களில் என்னால் முடிந்த உதவிகளை செய்துள்ளேன்.திருவொற்றியூரில், தளபதி மு.க.ஸ்டாலின் நற்சேவை மையம் மூலம் எனது சொந்த பணத்தில் ஏழை எளிய மக்களுக்கு, கல்லூரி, பள்ளி மாணவ மாணவிகளுக்கு பாடப்புத்தகம், கல்விக் கட்டணம் என பல்வேறு உதவிகளை செய்துள்ளேன். விதவைகள், முதியவர்கள், மாற்றுத் திறனாளிகள் பலருக்கு அரசின் உதவித்தொகை பெற்று தந்துள்ளேன். இனிவரும் காலங்களிலும் உங்களின் வாழ்க்கை மேம்பட பாடுபடுவேன். அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்வேன். எனவே, உங்கள் வீட்டு பிள்ளையான எனக்கு வரிசை எண் 2ல் உள்ள பொ.ஆதிகுருசாமி, தண்ணீர் குழாய் சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெற செய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன்,’’ என்றார். அப்போது அங்கிருந்த பொதுமக்கள், நாங்கள் வாக்காளர்கள் மட்டுமல்ல உங்களது உறவினரை போன்றவர்கள். எங்களது ஓட்டு உங்களுக்குத்தான். எங்களுக்காக உழைத்த உங்களை வெற்றியடைய செய்வது எங்களது கடமை, என்று கூறி அவரை வாழ்த்தினர்….

Related posts

பாஜகவிற்கு வழிவிட்டு, விக்கிரவாண்டி இடைத்தேர்தலை அதிமுக புறக்கணித்துள்ளது: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு

பொய்மையின் மொத்த உருவம் எடப்பாடி பழனிசாமி: ஒ.பன்னீர்செல்வம் கடும் கண்டனம்

விக்கிரவாண்டியில் இன்றுடன் பரப்புரை ஓய்கிறது