விவசாய பணி முடிந்து இரவு 8 மணியளவில் வீடு திரும்பினர். அப்போது, வீட்டுக்கு வந்து போது வீட்டு கதவின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். உள்ளே சென்று பார்த்த போது, பீரோ உடைக்கப்பட்டு, அதிலிருந்த 6 பவுன் தங்க நகை மர்ம நபர்கள் திருடிச் சென்றது தெரியவந்தது. இதுகுறித்து துரைராஜ் பாடாலூர் போலீசில் புகார் அளித்தார்.
அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட மர்ம நபர்களை தேடி வருகின்றனர். மேலும், கைரேகை நிபுணர்கள் வந்து தடயங்களை சேகரித்தனர். செட்டிகுளத்தில் வீட்டு பூட்டை உடைத்து தங்க நகை, கொள்ளை போன சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.