பாமக நிறுவனர் ராமதாஸ், தொண்டர்களுக்கு எழுதியுள்ள கடித்தத்தில் கூறியிருப்பதாவது: கடந்த 2004 மற்றும் 2009ம் ஆண்டுகளில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் இருந்து 6 பா.ம.க. உறுப்பினர்கள் மக்களவையில் இடம் பெற்றிருந்தனர். தமிழகத்தின் தன்மானத்தைக் காக்கவும், கோரிக்கைகளை நிறைவேற்றவும் ஓங்கிக் குரல் கொடுத்தனர். அதனால் தமிழகத்தின் கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டன. பாமக வேட்பாளர்களுக்கும், கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கும் வெற்றிக்கனியை பரிசாக வழங்க தமிழ்நாட்டு மக்கள் தயாராகவே உள்ளனர். அதே நேரத்தில் அந்தக் கனியை பறிக்க நமது உழைப்பும் மிகவும் அவசியம். ஏப்.19 உங்களின் உழைப்பை எடைபோடும் நாளாகவும், ஜூன் 4ம் தேதி நீங்கள் உழைப்பின் பயனை கொண்டாடும் நாளாகவும் அமைய வாழ்த்துகிறேன். இவ்வாறு தெரிவித்துள்ளார்.