நாகோன் மாவட்டம் கடும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளது. அந்த மாவட்டத்தில்,2.79 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அதற்கு அடுத்து ஹோஜாய் 1,26,813 பேரும், கச்சாரில் 1.12,265 பேரும் பாதிப்புக்குள்ளாகியுள்ளனர். அந்த மாவட்டங்களை சேர்ந்த 40,000 பேர் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். மழை பாதிப்புக்குள்ளான இடங்களில் தேசிய பேரிடர் மீட்பு, மாநில பேரிடர் மீட்பு படையினர் மீட்பு மற்றும் நிவாரண பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். பல இடங்களில் ரயில், சாலை போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது. சந்திரநாத்பூர் பிரிவு ரயில் பாதை மற்றும் சிர்ச்சார் ரயில் நிலையத்தில் வெள்ளம் புகுந்ததால் 10க்கும் மேற்பட்ட ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.