அதன்படி, சென்னை தி.நகரில் உள்ள காமராஜர் இல்லம் ரூ.2.60 கோடியில் புனரமைக்கப்படும்.
* பூந்தமல்லியில் உள்ள விக்டரி நினைவு பார்வையற்றோர் பள்ளிக் கட்டிடம் ரூ.24.20 கோடியில் புனரமைக்கப்படும்.
* நுங்கம்பாக்கத்தில் உள்ள பேராசிரியர் அன்பழகன் வளாகத்தில் உள்ள மெட்ராஸ் இலக்கிய சங்கக்கட்டிடம் ரூ.6.19 கோடியில் புனரமைக்கப்படும்.
* திருச்சி டவுன்ஹாலில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளிக்கட்டிடம் ரூ.4.85 கோடியில் மறுசீரமைத்து புனரமைக்கப்படும்.
* கன்னியாகுமரி இடலாக்குடியில் அமைந்துள்ள சதாவதானி செய்குதம்பி பாவலர் அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்திலுள்ள கட்டிடம் ரூ.3 கோடியில் மறுசீரமைத்து புனரமைக்கப்படும்.
* ராணிப்பேட்டை பாலாறு நதிக்கரையிலுள்ள தேசிங்கு ராஜா மற்றும் ராணிபாய் நினைவுச் சின்னங்கள் ரூ.2.50 கோடி மதிப்பீட்டில் மறுசீரமைத்து புனரமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்படும்.
* நான்கு தரக் கட்டுப்பாட்டு உபகோட்ட அலுவலகங்களுக்கு ஆய்வகங்கள், ஆய்வக உபகரணங்களுடன் ரூ.6 கோடியில் உருவாக்கப்படும்.
* கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டையில் புதியதாக ஒரு ஆய்வு மாளிகை கட்டப்படும். இவ்வாறு அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்தார்.