6 சட்ட கல்லூரிகளில் 480 மாணவர்களுக்கு கூடுதல் சேர்க்கைக்கு அனுமதி வழங்கப்படும்: அமைசர் எஸ்.ரகுபதி அறிவிப்பு

சென்னை: சட்டப்பேரவையில் நேற்று நீதி நிர்வாகம், சிறைகள் மற்றும் சீர்திருத்த பணிகள், சட்டத்துறை ஆகிய மானிய கோரிக்கை மீதான விவாதத்துக்கு பதில் அளித்து அமைச்சர் எஸ்.ரகுபதி புதிய அறிவிப்புகளை வெளியிட்டார். அது வருமாறு:
* சின்னசேலத்தில் ஒரு மாவட்ட உரிமையியல் மற்றும் குற்றவியல் நீதித்துறை நடுவர் மன்றம் புதிதாக அமைக்கப்படும்.
* தென்காசி, தூத்துக்குடி மற்றும் கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களுக்காக போதைப்பொருள் வழக்குகளை விசாரிப்பதற்கு என திருநெல்வேலியில் ஒரு சிறப்பு நீதிமன்றம் அமைக்கப்படும்.
* புழல் சிறையில் 1000 சிறைவாசிகளை அமைக்க கட்டிடம் கட்டப்படும்.
* தமிழகத்தில் உள்ள 6 சட்ட கல்லூரிகளில் 480 மாணவர்களுக்கு கூடுதல் சேர்க்கைக்கு அனுமதி வழங்கப்படும்.

Related posts

உத்தரப்பிரதேசத்தில் ஆன்மிக நிகழ்வின் கூட்ட நெரிசலில் சிக்கி 122 உயிரிழப்பு: தலைவர்கள் இரங்கல்

அமாவாசை மற்றும் வார இறுதி நாட்களை முன்னிட்டு பயணிகள் வசதிக்காக சிறப்பு பேருந்துகள் இயக்கம்

பவானிசாகர் அணை நீர்மட்டம் 66 அடியாக உயர்வு