பெண் போலீசுக்கு மிரட்டல் விடுத்த பாஜ நிர்வாகிகள் 6 பேர் கைது


வால்பாறை: வால்பாறை டவுனில் உள்ள சுப்பிரமணியசாமி கோயில் நுழைவாயிலின் செங்குத்தான இறக்கத்துக்கு காரில் வந்த 6 பேர் காரை நிறுத்திவிட்டு சென்றனர். இதனால் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. இதனால் அவர்களுடன் மற்றவர்கள் வாக்குவாதம் செய்ததில் கைகலப்பு ஏற்படும் சூழல் நிலவியது. அங்கு பணியில் இருந்த பெண் போலீஸ் ஒருவர் காரை உடனே எடுக்குமாறு கூறியபோது 6 பேரும்அவரை தகாத வார்த்தைகளால் பேசியதாக தெரிகிறது. இதனை சிசிடிவி மூலம் கட்டுப்பாட்டு அறையில் இருந்து கண்காணித்த போலீசார் வந்து அந்த 6 பேரையும் பிடித்து விசாரித்தனர்.

இதில் அவர்கள் பாஜ மண்டல பொதுச்செயலாளர் முரளிதரன் (35), பாஜ கொங்கு மண்டல நகர் இளைஞர் அணி தலைவர் துரைமுருகன் (36), துணைத்தலைவர் வெங்கடேஷ் (25), இளைஞர் அணி செயலாளர் அருண் (30), பொதுச்செயலாளர் சசிக்குமார் (42) மற்றும் பாஜ நிர்வாகி கோதண்டம் (46) என்பது தெரியவந்தது. 6 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

Related posts

அக்.27ல் தவெக மாநாடு: காவல்துறை அனுமதி

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு

பொதிகை எக்ஸ்பிரஸ் ரயிலை கவிழ்க்க சதி?