சென்னை: அயனாவரத்தில் போலீஸ் என்று கூறி மருந்துக் கடை உரிமையாளர் பிரபாகரனிடம் ரூ.87,000 பறிக்கப்பட்டுள்ளது. பில் இல்லாமல் வலி நிவாரணி மாத்திரைகளை போதைக்காக விற்கிறாயா என்று கூறி பிரபாகரனை பைக்கில் ஏற்றிச் சென்றனர். பிரபாகரன் மனைவியை தொடர்பு கொண்டு மிரட்டி ரூ.67,000 பணத்தை மர்மநபர்கள் பறித்தனர். மருந்துக்கடை உரிமையாளரிடம் மோசடியில் ஈடுபட்டு பணம் பறித்த 3 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.