வேலூர்: வேலூர் சாய்நாதபுரத்தை சேர்ந்தவர் எட்டியப்பன்(58), ஓய்வுபெற்ற பிஎஸ்என்எல் இளநிலை பொறியாளர். இவரது மனைவி சரஸ்வதி. வேலூர் சரக டிஐஜி அலுவலக கண்காணிப்பாளர். கடந்த 2ம் தேதி குடும்பத்துடன் ஊட்டிக்கு சுற்றுலா சென்றுள்ளனர். நேற்று முன்தினம் திரும்பி வந்தபோது, முன்பக்க கதவுகள் உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது. அறையில் இருந்த பீரோ உடைக்கப்பட்டு 62 பவுன் நகைகள், ரூ10 ஆயிரம் கொள்ளை போயிருந்தது. புகாரின்படி பாகாயம் போலீசார் வழக்கு பதிந்து அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமராக்களில் பதிவான காட்சிகளை வைத்து கொள்ளையரை தேடி வருகின்றனர்.
டிஐஜி அலுவலக பெண் அதிகாரி வீட்டில் 62 பவுன் நகை கொள்ளை
previous post