நேற்றிரவு 8 மணி முதல் கரைதிரும்பிய விசைப்படகு மீனவர்கள் எதிர்பார்த்ததை விட அதிகமாக சாலை, பாறை, ஊழி, விளைமீன், நகரை, ஐலேஷ், கோழி தீவனத்திற்கு பயன்படும் கலசல் மீன்கள் கிடைத்ததால் மகிழ்ச்சி அடைந்துள்ளனர் . அத்துடன் கேரளாவில் அரபிக்கடல் பகுதியில் மீன்பிடி தடை காலம் அமலில் இருப்பதால் கேரள மீன் வியாபாரிகள் மீன்களை வாங்க தூத்துக்குடிக்கு வந்துள்ளதால் மீன்களுக்கு நல்ல விலை கிடைக்கும் என மீனவர்கள் மகிழ்ச்சி தெரிவித்தனர்.