60 பவுன், ரூ.5.50 லட்சம் பண மோசடி: திண்டுக்கல் பெண் சாமியார் கைது தங்கையும் சிக்கினார்

வத்தலக்குண்டு: காளி என்று கூறி, 60 பவுன், ரூ.5.50 லட்சம் மோசடி செய்த வழக்கில் திண்டுக்கல் பெண் சாமியார் மற்றும் அவரது தங்கை கைதாயினர். திண்டுக்கல், மேற்கு ஆரோக்கியமாதா தெருவில் வசித்து வருபவர் பபிதா என்ற பவித்ரா (42). இவர் தன்னை காளி என கூறிக்கொண்டு திண்டுக்கல்லில் உள்ள லாட்ஜ்களில் நிகழ்ச்சிகள் நடத்தி வந்தார். இந்நிலையில், திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை பகுதியைச் சேர்ந்த தவயோகி என்ற ஆண் சாமியாரிடம், கும்பகோணம் பகுதியில் ஆசிரமம் நடத்த நிலம் வாங்கி தருவதாக கூறி ரூ.5.50 லட்சம் மற்றும் 60 சவரன் நகையை பெற்று ஏமாற்றிள்ளார்.இதுகுறித்து கடந்த 6 மாதங்களுக்கு முன்பு, நிலக்கோட்டை காவல் நிலையத்தில் தவயோகி புகாரளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்கு பதிந்து பவித்ராவை தேடி வந்தனர். இந்நிலையில் பவித்ரா, திண்டுக்கல் மேற்கு ஆரோக்கியமாதா தெருவில் உள்ள அவரது வீட்டில் பதுங்கியிருப்பதாக நிலக்கோட்டை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து நிலக்கோட்டை தனிப்படையினர், நேற்று அங்கு சென்று பவித்ரா மற்றும் அவரது தங்கை ரூபாவதி ஆகிய இருவரையும் கைது செய்து நிலக்கோட்டைக்கு அழைத்துச் சென்றனர். …

Related posts

அதிமுக நிர்வாகி கொலை: வாலிபர் கைது

விமானத்தில் அழைத்து வந்து நட்சத்திர ஓட்டலில் தங்க வைத்து மெகா பிசினஸ்: வாட்ஸ் அப் மூலம் தொழிலதிபர்களுக்கு வெளிநாட்டு பெண்கள், அழகிகள் சப்ளை

கொளத்தூரில் இருசக்கர வாகன திருட்டில் ஈடுபட்டிருந்த டெலிவரி ஊழியர்கள் 2 பேர் கைது