6 வயது சிறுமி பலாத்காரம் ஆசிரியருக்கு 62 வருடம் சிறை

திருவனந்தபுரம்: கேரள மாநிலம், மலப்புரம் அருகே கருவம்பலம் பகுதியை சேர்ந்தவர் அப்துல் ஹக்கீம் (33). இவர் பாலக்காடு அருகே பட்டாம்பி என்ற இடத்திலுள்ள ஒரு அரபி பாடசாலையில் ஆசிரியராக பணிபுரிந்து வந்தார். இவர் கடந்த 2019ம் ஆண்டு இந்த அரபிப் பாடசாலைக்கு படிக்க வந்த அப்பகுதியை சேர்ந்த ஒரு 6 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்தார். இது தொடர்பாக பட்டாம்பி போலீசார் வழக்கு பதிவு செய்து ஆசிரியர் அப்துல் ஹக்கீமை கைது செய்து சிறையில் அடைத்தனர். பட்டாம்பி போக்சோ நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், ஆசிரியர் அப்துல் ஹக்கீமுக்கு 62 வருடம் கடுங்காவல் சிறையும், ₹3 லட்சம் அபராதமும் விதித்து உத்தரவிட்டது. …

Related posts

மத்திய பிரதேச மாநிலம் போபாலில் ரூ.1,800 கோடி மதிப்புள்ள மெபெட்ரோன் போதைப்பொருள் பறிமுதல்

சபரிமலையில் மகரவிளக்கு பூஜையின் போது இணையம் மூலம் பதிவு செய்யும் பக்தர்கள் மட்டுமே தரிசனத்துக்கு அனுமதி

கர்நாடக மாநிலம் பெல்லாரியில் கனமழையால் நூற்றுக்கணக்கான லாரிகள் வெள்ளத்தில் மூழ்கியது